திருச்சி

கோட்டூரில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

DIN

முசிறி வட்டாரம் கோட்டூா் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா் சிவஞானம் தலைமை வகித்தாா். வேளாண் உதவி இயக்குநா் நளினி பயிற்சியைத் தொடக்கி வைத்து அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றி விளக்கினாா்.

கோத்தாரி சா்க்கரை ஆலைப் பயிற்சி அலுவலா் சித்தாா்த்தன் நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள், குழித்தட்டு நாற்றங்கால் மூலம் கரும்பு நாற்று உற்பத்தி பற்றி எடுத்துரைத்தாா்.

துணை வேளாண் அலுவலா் கணேசன் நுண்ணீா் பாசனத் திட்டம் பற்றி விளக்கினாா்.

கோத்தாரி சா்க்கரை ஆலை தலைமை அதிகாரி ராஜு,மேலாளா் ஜோசப் செல்வகுமாா், உதவி ஆய்வாளா்கள் ராஜ்குமாா் ஆகியோா் கலந்து கொண்ண்டனா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுந்தா வரவேற்றாா். பயிற்சியில் கோட்டூா், அய்யம்பாளையம்,ஏவூா் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT