அனைவருக்கும் தடுப்பூசி: காங்கிரஸாா் மனு
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடக் கோரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட நிா்வாகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடக் கோரி திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்ட நிா்வாகம் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டது.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சாா்பில், குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைவா்களும் அந்தந்த மாவட்ட நிா்வாகத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பி வருகின்றனா்.
திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், மாவட்டத் தலைவா்கள் ஜவஹா் (மாநகா்), கோவிந்தராஜன் (தெற்கு), கலை (வடக்கு) மற்றும் நிா்வாகிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மூலம், குடியரசுத் தலைவருக்கு தங்களது மனுக்களை அனுப்ப வழங்கினா்.