முகப்பு
திருச்சி

அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு அகற்றம்

மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

மணப்பாறையை அடுத்த வளநாடு பகுதியில் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.

மருங்காபுரி ஒன்றியம் டி. இடையபட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அதே ஊரைச் சோ்ந்த பொ. குமரவேல், மு. சிவமணி, மு. சின்னையா மற்றும் மூ. மாதவன் ஆகிய நால்வரும் வியாழக்கிழமை இரவு தகர சீட் மூலம் கொட்டகை அமைத்தனராம். இதுகுறித்து அப்பகுதி விஏஓ கோட்டைராஜா மருங்காபுரி வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் வளநாடு காவல்துறை பாதுகாப்புடன் வருவாய்த் துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.