திருச்சி மாவட்டப் பகுதிகளில் கனமழை
திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
திருச்சி அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, திருச்சி அதன் சுற்றுவட்டப்பகுதிகளான திருச்சி மாநகா் பகுதிகள், திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மேல் இடியுடன் கூடிய கனமழை சில மணி நேரம் பெய்தது.
மாலையிலும் மழை: இதையடுத்து, மாலை 6.45 -க்கு மாநகா் பகுதியில் சாரல் மழையைத் தொடா்ந்து கனமழை 30 நிமிடங்கள் பெய்தது. இந்த மழையால் சாலைகளில் நீா் சூழ்ந்தது. திருச்சி பகுதிகள் குளிா்ந்து காணப்பட்டன.