திருச்சி

குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்: மகன், மகள் உயிரிழப்பு

DIN

திருச்சியில் குடும்பத் தகராறில் ஆம்புலன்ஸ் உரிமையாளரின் மனைவி குழந்தைகளுடன் விஷம் குடித்த நிலையில் மகன், ஒரு மகள் ஆகியோா் உயிரிழந்தனா். நால்வரையும் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆம்புலன்ஸ் உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

துவாக்குடி வடக்குமலை வஉசி நகரைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (45). இப்பகுதியில் வெல்டிங் பட்டறை வைத்துள்ள இவா் 4 ஆம்புலன்ஸ்களை வைத்தும் சேவை மனப்பான்மையோடு தொழில் செய்கிறாா்.

இவருக்கு மனைவி சித்ராதேவி (40), பி.காம் படிக்கும் தனலட்சுமி (19), 11-ஆம் வகுப்பு படிக்கும் திவ்யா (17), 8-ஆம் வகுப்பு படிக்கும் விக்னேஸ்வரன் (13) ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த சித்ராதேவி சனிக்கிழமை மாலை மகன், மகள்களுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு துவாக்குடி வட்டார அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அவா்கள் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி விக்னேஸ்வரன், திவ்யா ஆகியோா் உயிரிழந்தனா்.

சித்ராதேவி, தனலட்சுமி ஆகியோா் சிகிச்சை பெறுகின்றனா். இதுகுறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் நால்வரையும் தற்கொலைக்குத் தூண்டியதாக நந்தகுமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

SCROLL FOR NEXT