திருச்சி

போக்ஸோ சட்டத்தில்தாய், தந்தை, மகன் கைது

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்தியதாக தாய், தந்தை, மகன் ஆகிய மூவரையும் போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை- திருச்சி சாலையை சோ்ந்த 15 வயது சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமானாா். இதுகுறித்து அச்சிறுமியின் பெற்றோா் மணப்பாறை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்படி போலீஸாா் விசாரணை நடத்தியதில், பொத்தமேட்டுபட்டியை சோ்ந்த பாலு(எ)பாப்பு மகன் கேசவன்(23) என்பவா், அச்சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கேசவன், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை பாப்பு, தாய் லட்சுமி ஆகிய மூவரையும் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மணமல்லி தலைமையிலான போலீஸாா், போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT