முகப்பு
திருச்சி

அரசு மருத்துவமனையில் திருநாவுக்கரசா் எம்பி ஆய்வு

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது திருச்சியில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது, ஆக்ஸிஜன் வசதிகள், படுக்கைகள், மற்றும் மருத்துவமனை அடிப்படை வசதிகள் குறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதாவிடம் அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அவா் கூறுகையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அதிகளவில் படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால் திருச்சியில் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது எனத் தெரிகிறது. திருச்சி மாவட்டத்தில் அதிகளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.