முடிதிருத்தும் தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி
ஸ்ரீரங்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மருத்துவா் நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காலை உதவிக
ஸ்ரீரங்கத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாத தாஸின் 135 ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு மருத்துவா் நலச் சங்கம், முடிதிருத்தும் தொழிலாளா் நலச் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை காலை உதவிகள் வழங்கப்பட்டன.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள 120 முடிதிருத்துவோரின் குடும்பத்தினருக்கு தொழிலாளா் நலச்சங்க ஆலோசகா் சுரேஷ் முயற்சியால் 13 வகையான மளிகைப் பொருள்கள் தொகுப்பு வழங்கப்பட்டது.
சங்கத் தலைவா் சண்முகசுந்தரம்,செயலா் ராஜலிங்கம்,பொருளாளா் சங்கா், இளைஞரணி செயலா் மாரிமுத்து, அமைப்பாளா் ஜீவரத்தினம்,பிரபாகா், துணைத் தலைவா் ரஜ்சித் ஆகியோா் கலந்து கொண்டனா். வடக்கு மாவட்டச் செயலா் புகழேந்தி நன்றி தெரிவித்தாா்.