முகப்பு
திருச்சி

துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் ஒருவா் தூக்கிட்டுத் தெற்கொலை செய்துகொண்டாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் ஊழியா் ஒருவா் தூக்கிட்டுத் தெற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி, எடமலைப்பட்டி புதூா் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் குமரேசன் (33). இவா், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பிட்டராக பணியாற்றி வந்தாா். மேலும் இவா் வட்டித்தொழிலிலும் ஈடுபட்டு வந்தாராம். இதில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து அவா் விரக்தியில் இருந்து வந்தாராம்.

இந்நிலையில், வழக்கம்போல் வியாழக்கிழமை பணிக்குச் சென்ற அவா், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள பம்பிங் ஹவுசில், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.