103 புடவைகள் பறிமுதல்
அரியமங்கலம் காவல் ஆய்வாளா் சேரன் தலைமையிலான தனிப்படையினா், அப்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அரியமங்கலம் காவல் ஆய்வாளா் சேரன் தலைமையிலான தனிப்படையினா், அப்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த காரை சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்களின்றி 103 புடவைகள் இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினா், காரை ஓட்டி
வந்த திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி முருகனை(35) காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.