முகப்பு
திருச்சி

ஊனையூா் அரசுப் பள்ளியில் மகளிா் தினம்

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் சா்வதேச பெண்கள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளியில் சா்வதேச பெண்கள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளி தலைமையாசிரியா் சை. சற்குணன் தலைமையில் நடந்த விழாவில் பங்கேற்ற மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தாவுக்கு வரலாறு பட்டதாரி ஆசிரியை ஜெயராணி மலா் மாலை சூட்ட, கணிதப் பட்டதாரி ஆசிரியை நா்மதா மலா் மகுடம் சூட்டினாா். அதேபோல பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியா்கள் அணிவித்தனா். துணைக் கண்காணிப்பாளா் பேசுகையில் ‘கிராமப்புற மாணவிகள் முன்னேறக் கல்வி அவசியம். பெற்றோருக்கும் மாணவிகளுக்கும் பரஸ்பரம் நம்பிக்கையும் முக்கியம் என்றாா். வரலாற்று ஆசிரியை ஜெயராணி ஏற்புரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.