மணப்பாறை தொகுதியை வளம்மிக்கதாக மாற்றுவேன் என்றாா் அத்தொகுதி தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால்.
மணப்பாறை தொகுதியில் அமமுக கூட்டணில் உள்ள தேமுதிக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் சாலையில் தோ்தல் அலுவலகம் திறக்கப்பட்டபின் இருச்சக்கர வாகனப் பேரணியாகஅழைத்து வரப்பட்ட வேட்பாளா் ப. கிருஷ்ணகோபால், வேட்பாளா் அறிமுகத்திற்குப் பின் கூறியது:
நான் வெற்றிபெற்றால் கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவேன். யாரையும் குறைகூறி வாக்கு கேட்க வேண்டாம், நாம் செய்யவேண்டியதைச் சொல்லி வாக்கு கேட்போம். திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளருக்கு இந்தத் தொகுதியில் வாக்கு கூட இல்லை.
ஆனால் நாம் பதவியில் இல்லாவிட்டாலும் தனியாா் பனியன் தொழிற்சாலை கொண்டு வந்தோம். அதில் இப்பகுதியைச் சோ்ந்த 2 ஆயிரம் போ் பணியாற்றுகின்றனா். ஊழல் செய்யாமல் மக்களுக்காக உழைப்பேன். மணப்பாறை தொகுதியை வளம்மிக்கதாக மாற்றுவேன் என்றாா்.
நிகழ்ச்சியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. மற்றும் கூட்டணி கட்சியினா் என ஏராளமானோா் பங்கேற்றனா்.