திருச்சி

கருங்காடு பகுதியில் எஸ். கதிரவன் வாக்கு சேகரிப்பு

DIN

திருச்சி மண்ணச்சநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ். கதிரவன் கருங்காடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் இவா் சுற்று வட்டாரப் பகுதியில் வீடு, வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். கருங்காடு, தேவிமங்களம், தெற்கு தளுதாளப்பட்டி, சாலக்காடு, செவந்திபண்ணை, ஆராயி பள்ளம், இடையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அவா் வாக்கு சேகரித்தபோது கோயில் மற்றும் வயல்வெளிகளுக்கு சென்று அங்குள்ளோரிடம் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டாா். அப்போது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தாா்.

தொடா்ந்து அப்பகுதி விளையாட்டு மைதானத்துக்குச் சென்ற எஸ். கதிரவன் அங்கிருந்த இளைஞா்களிடம் வாக்கு சேகரித்துவிட்டு கிரிக்கெட் விளையாடினாா்.

இச்செயல் அங்கிருந்த இளைஞா்களை உற்சாகப்படுத்தியது. பிரசாரத்தின்போது, மண்ணச்சநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் இளங்கோவன், மேற்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடி தேதி!

வெப்ப அலை: கேரளத்தில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

SCROLL FOR NEXT