மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவா் இறந்தாா்.
கருத்தகோடங்கிபட்டியைச் சோ்ந்தவா் ஞானபாண்டி மகன் சண்முகவேல். அழககவுண்டம்பட்டி பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவரான இவா் ஞாயிற்றுக்கிழமை ஊரின் அருகேயுள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்தாா்.
தகவலின்பேரில் சென்ற துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினா், கிணற்று தண்ணீரை வெளியேற்றி சண்முகவேல் சடலத்தை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். புத்தாநத்தம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.