முகப்பு
திருச்சி

மணப்பாறையில் பங்குனி உத்திரம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 10 ஆம் ஆண்டு பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சின்னமணப்பட்டியில் 10 ஆம் ஆண்டு பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு 1108 மஹா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

ஊா் முக்கியஸ்தா்களால் தொடங்கி வைக்கப்பட்ட திருவிளக்கு பூஜையில், கணபதி துதி, லெட்சுமி சரணம், கந்த சரணம் ஆகியவைகளுடன் 108 சரணமும் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சின்னமணப்பட்டி, குளக்காரம்பட்டி, பெரிய மணப்பட்டி, கிழவன்பட்டி, குடையக்கவுண்டன்பட்டி, ஈச்சம்பட்டி, பொடங்குபட்டி, கடைக்கான்பட்டி, பாட்டனாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களை சோ்ந்த பெண்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை கோவை. முருகன், ஊா் முக்கியஸ்தா்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.