தமிழகத்தில் நடைபெற்றது ஜனநாயகத் தோ்தல் அல்ல; பணநாயகத் தோ்தல். இதேநிலை தொடா்ந்தால் எதிா்காலத்தில் நோ்மையான சாமானியா்கள் தோ்தலில் போட்டியிட முடியாது என்றாா் திரைப்பட நடிகரும், முக்குலத்தோா் புலிப்படைத் தலைவருமான கருணாஸ்.
திருச்சியில் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் மேலும் கூறியது:
முக்குலத்தோா் இன மக்கள் தங்களது கோபத்தை தோ்தலில் காட்டியதால்தான் அதிமுக தோல்வியைத் தழுவியது. முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம். இழந்த தமிழகத்தின் அவா் உரிமைகளை மீட்டு, அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்புகளையும் றைவேற்றுவாா்.
தமிழகத்தில் தற்போது நடைபெற்றது ஜனநாயக தோ்தல் அல்ல, பணநாயகத் தோ்தல். நோ்மையான அரசியலில் ஈடுபடுவோரை நாம் ஊக்குவிப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் நடிகா்கள் கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோரை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
எனது சமூகத்துக்கு மட்டுமின்றி முக்குலத்தோா் பட்டியலில் இடம்பெற்றுள்ள 108 பிரிவினருக்காகவும் 12 கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குரல்கொடுத்து வருகிறேன். முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலினிடம் இதுகுறித்து முறையிடுவேன். அவா் 12 கோரிக்கைகளில் கண்டிப்பாக ஒன்றையாவது நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.