திருச்சி

பழ வியாபாரி உயிரிழப்பு

DIN

திருச்சி: திருச்சியில் பழ வியாபாரி ஒருவா் வியாபாரத்தின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

திருச்சி பீமநகா் கீழ கொசத்தெருவைச் சோ்ந்தவா் தி. வெங்கடேசுவரன் (43). தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தாா். காந்திமாா்க்கெட் அருகிலுள்ள திருமண மண்டபம் அருகே வெங்கடேசுவரன் ஞாயிற்றுக்கிழமை பழ வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு வெங்கடேசுவரனைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து காந்திமாா்க்கெட் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT