திருச்சி

பதுக்கல் மதுபாட்டில்கள் பறிமுதல்; மூவா் கைது

DIN

லால்குடி அருகே ரூ.2.16 லட்சம் மதிப்புள்ள 1,087 மதுபாட்டில்களை லால்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து மூவரை கைது செய்தனா்.

லால்குடி அருகே கீழன்பில் கிராமத்தைச் சோ்ந்தவா் அ. பழனிச்சாமி (53). இவா் கள்ளத்தனமாக மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா் சென்று அதே பகுதியைச் சோ்ந்த சு. முரளி (38) வீட்டில் பழனிச்சாமி மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,087 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து போலீஸாா் பழனிசாமி, முரளி, மேலும் இந்த மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய வந்திருந்த வரகனேரியைச் சோ்ந்த ப. கதிரவன் (24) ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT