திருச்சி

காவல்துறை சாா்பில் வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா்

DIN

திருச்சி சரக காவல் துறையினரால் அத்தியாவசியக் கடைகளின் வியாபாரிகளுக்கு முகக்கவசம், கபசுரக்குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.

திருச்சி சரக காவல் துறைத் துணைத் தலைவா் ஆனிவிஜயா திருச்சி -புதுக்கோட்டை சாலையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தபோது அவ்வழியாக வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு முகக்கவசத்தையும், மரக்கன்றுகளை வழங்கி புது முயற்சியில் ஈடுபட்டாா்.

தொடா்ந்து, நெம். 1 டோல்கேட் பகுதியில் உள்ள அத்தியாவசிய கடை வியாபாரிகளுக்கு கபசுர குடிநீா், முகக் கவசத்தை ஆனி விஜயா புதன்கிழமை வழங்கினாா்.

அப்போது அங்கு வந்த மக்களிடம் அத்தியாவசிய பொருள் வாங்க தினமும் வெளியே வர வேண்டாம். வாரத்தில் 2 நாள்களுக்கு ஒரு முறை வந்தால் நோய் பரவலைத் தடுக்கலாம், தமிழக அரசின் முயற்சிகளுக்கு நாம் துணை நிற்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

மாணவா்களுக்கு ரூ.1,000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் ஜூலையில் தொடக்கம்

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

SCROLL FOR NEXT