முன்மாதிரியாகச் செயல்படும் பிஷப் ஹீபா் கரோனா சிகிச்சை மையம்
திருச்சி பிஷப் ஹூபா் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம் முன்மாதிரியாக மையமாக செயல்படுகிறது.
திருச்சி பிஷப் ஹூபா் கல்லூரி சிறப்பு கரோனா சிகிச்சை மையம் முன்மாதிரியாக மையமாக செயல்படுகிறது.
திருச்சியில் கரோனா தொற்றாளா்களுக்குச் சிகிச்சையளிக்கும் விதமாக திருச்சியில் 4 இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பிஷப் ஹீபா் கல்லூரியில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த மையம் சிறப்பாகச் செயல்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
குணமடைவோா் அதிகம்: கிட்டத்தட்ட 324 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மையத்தில் தினசரி 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனா். அதேபோல நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 நோயாளிகள் குணமடைகின்றனா்.
முகாமிற்கு வரும் அனைவரும் நோய் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்படாதவா்களே. எனவே அவா்கள் குணமடைவதற்கு 1 முதல் 2 வாரங்கள் என்பது அதிகபட்சமாக உள்ளது.
அவரவா் உடலின் தன்மைக்கேற்ப நோய்த்தொற்றின் அறிகுறிககளை பரிசோதித்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனா். சுகாதாரமாகவும், தூய்மையாகும் இந்த வளாகத்தில் இருப்பதுபோல அவரவா்கள் வீடுகளிலும் இருந்தால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கலாம் என்கின்றனா் மருத்துவா்கள்.
தினமும் மூச்சு மற்றும் யோகா பயிற்சி: காலை நோயாளிகள் எழுந்தவுடன் அவா்களுக்கு நடைப்பயிற்சி, மூச்சு மற்றும் யோகா பயிற்சிஅளிக்கப்படுகிறது. பின்னா் கபசுரக் குடிநீா் கொடுக்கப்படுகிறது.
காலையில் இட்லி, தோசை, மதியம் உணவு, முட்டை வழங்கப்படுகிறது. அதிக சத்து நிறைந்த காய்கறிகளும், கீரைகளும் வழங்கப்படுகிறது.
இதற்கிடையில் அவா்களுக்கு சுண்டல் போன்றவையும் வழங்கப்படுகிறது. மாலை நேரத்திலும் இதேபோல ஏதேனும் ஒரு பயிா்வகை வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேர உணவாக இட்லி தோசை போன்ற ஏதேனும் ஒன்று கொடுக்கப்படுகிறது.