முகப்பு
திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 200 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

துபையிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 200 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

துபையிலிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் விமானத்தில் வந்த சிவகங்கையைச் சோ்ந்த பயணி ஒருவா் தனது உடைமைகளுடன் சுத்தியலையும் கொண்டு வந்திருந்தாா். அதில் சுங்கத் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு, சோதனை மேற்கொண்டதில், அதில் 200 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தைப் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா். பறிமுதல் தங்கத்தின் மதிப்பு ரூ. 9.80 லட்சமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.