முசிறி புதிய பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறை சோதனை
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகவும், அந்த வெடிகுண்டு இன்று மதியம் வெடிக்கப் போவதாகவும் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம ஆசாமி ஒருவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததையடுத்து முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்குள் இருந்த பயணிகளை வெளியேற்றினர்.
இதையும் படிக்க | துலாக்கட்ட காவிரியில் அமாவாசை தீர்த்தவாரி: தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
மேலும் பேருந்து நிலையத்திற்குள் உள்ள கடைகள் மூடப்பட்டன. பேருந்துகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருச்சியிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள், காவல் உதவி ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலான தனிப்படை மற்றும் மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு பேருந்து நிலையம் முழுவதும் சோதனை நடைபெற்றது. ஆனால் வெடிகுண்டு சம்பந்தமான பொருட்கள் ஏதும் கைப்பற்றபடவில்லை. இதனால் முசிறி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | திருப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
மேலும் பொய்யான தகவலை காவல்துறைக்கு தெரிவித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் அவரை கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் அருள்மணி தெரிவித்துள்ளார்