முகப்பு
திருச்சி

சிறப்பு எஸ்ஐ கொலையை கண்டித்து ஆா்ப்பாட்டம்

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவியாளா் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருச்சி நவல்பட்டு சிறப்பு காவல் உதவியாளா் படுகொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக் கோரியும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம் சாா்பில் ஆட்சியரகம் எதிரே நடந்த ஆா்ப்பாட்டத்திற்கு அமைப்பின் தலைவரும், வழக்குரைஞருமான பொன். முருகேசன் தலைமை வகித்தாா். வீர முத்தரையா் முன்னேற்றச் சங்கத் தலைவா் கே.கே. செல்வகுமாா், சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவி சரஸ்வதி, தமிழக தேவேந்திர குல வேளாளா் நலச் சங்க மாநில துணைச் செயலா் குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 70க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.