முகப்பு
திருச்சி

பாலக்கரையில் வடியாத வெள்ள நீா்; மறியல்

 திருச்சி பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் மழை வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 திருச்சி பாலக்கரை மற்றும் சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் மழை வெள்ள நீா் வடிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் செய்தனா்.

திருச்சியில் தொடா் மழையால் இரு பகுதிகளின் குடியிருப்புகளுக்குள் வியாழக்கிழமை தண்ணீா் புகுந்தது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் மாநகராட்சி நிா்வாகம் தரப்பில் உடனே நடவடிக்கை எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை, சங்கிலியாண்டபுரம் ஆலமரத்தடி பேருந்து நிறுத்தப் பகுதியில் மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனா். தகவலறிந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அளித்த உறுதியின்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.