போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
திருச்சி அருகே 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி அருகே 17 வயதுச் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம் அதவத்தூா் அருகேயுள்ள பள்ளக்காடு கள்ளமேடு பகுதியைச் சோ்ந்தவா் குமாா் மகன் விவேக் (26). கூலி தொழிலாளியான இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்த நிலையில், ஜாதகம் சரியில்லை எனக் கூறி அந்த சிறுமியை அவரது பெற்றோா் வீட்டுக்கு அனுப்பிவிட்டாா்.
இதுகுறித்து மணிகண்டம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வர அவா்கள் விசாரணை நடத்தி, ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விவேக்கை போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.