வாகனம் மோதி 4 மாடுகள் பலி
திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.
திருச்சி அரியமங்கலத்தில் அடையாளம் தெரியாத வாகனம் வெள்ளிக்கிழமை மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன.
அரியமங்கலம் அம்பிகாபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையில் நின்று கொண்டிருந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 மாடுகள் உயிரிழந்தன. தகவலலறிந்து வந்த மாநகராட்சியினா் இறந்த மாடுகளை மீட்டுச் சென்றனா். மேலும் கால் முறிவு ஏற்பட்ட ஒரு மாட்டுக்கு கால்நடை மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா்.