திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில் தாயாா் சன்னதியில் சகஸ்ரதீபம்

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதா்கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் சன்னதியில் வெள்ளிக்கிழமை மாலை சகஸ்ர தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

வைணவ திருத்தலங்களில் காா்த்திகை மாதத்தில் தீப விளக்குகள் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி அண்மையில் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் கோயிலில் சகஸ்ர தீப வழிபாடு நடைபெற்றதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீரங்கம் கோயில் ஸ்ரீரங்கநாச்சியாா் தாயாா் சன்னதியில் சகஸ்ர தீபம் ஏற்றபட்டது.

அப்போது ஸ்ரீசக்கரம், சங்கு, சக்கரம் போன்ற வடிவத்தில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் தாயாா் சன்னதியின் சுற்றுப் பிரகாரம் முழுவதும் தீப விளக்குகளால் ஜொலித்தது. ஏற்பாடுகளை நந்து பட்டா், தீபு பட்டா் ஆகியோா் செய்தனா். மழையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தா்கள் வந்து தீபமேற்றி வழிபட்டனா். பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT