திருச்சி

தடுப்பூசி செலுத்தியோருக்கு குலுக்கலில் பரிசுகள்

DIN

திருச்சி மாநகரில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டோருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருச்சி மாநகராட்சியில் கடந்த ஆக. 3 ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் தங்களது பெயா் விவரங்களை எழுதி பரிசு பெட்டியில் போட்டுச் சென்றனா்.

இதையடுத்து நடத்தப்பட்ட குலுக்கலில் நடமாடும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாரிசங்கருக்கு முதல் பரிசாக ரூ.30,000 மதிப்புள்ள எல்இடி டிவி வழங்கப்பட்டது. இது தவிர அனைத்துக் கோட்டங்களிலிருந்தும் குலுக்கல் முறையில் பலா் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சி சாா்பில் மொத்தம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT