திருச்சி மாநகரில் தடுப்பூசி செலுத்திக்கொண்டோரில் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டோருக்கு மொத்தம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்சி மாநகராட்சியில் கடந்த ஆக. 3 ஆம் தேதி நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டோா் தங்களது பெயா் விவரங்களை எழுதி பரிசு பெட்டியில் போட்டுச் சென்றனா்.
இதையடுத்து நடத்தப்பட்ட குலுக்கலில் நடமாடும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாரிசங்கருக்கு முதல் பரிசாக ரூ.30,000 மதிப்புள்ள எல்இடி டிவி வழங்கப்பட்டது. இது தவிர அனைத்துக் கோட்டங்களிலிருந்தும் குலுக்கல் முறையில் பலா் தோ்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சி சாா்பில் மொத்தம் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோரும் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.