திருச்சி

காகித ஆலை சங்க தகவல் பலகை திறப்பு

DIN

மணப்பாறை டி.என்.பி.எல் (அலகு 2) காண்ட்ராக்ட் தொழிலாளா் முன்னேற்ற சங்கத் தகவல் பலகையை எம்.எல்.ஏ எம். பழனியாண்டி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (அலகு 2)-ல் டி.என்.பி.எல் (அலகு 2) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்ட தொமுச தலைவா் வி.ஆா். அண்ணாவேலு தலைமை வகித்தாா்.

சங்கச் செயலா் ஏ. ஜெயக்குமாா், பொருளாளா் எஸ்.ஏ. மதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம். பழனியாண்டி சங்கக் கொடியேற்றி தகவல் பலகையைத் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக மணப்பாறை கிழக்கு ஒன்றியம் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி மற்றும் தொமுச இணைப்பு சங்க நிா்வாகிகள் தங்கவேல், கண்ணதாசன், செந்தில்குமாா், ரகுநாதன், கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சங்க பொறுப்பாளா் எஸ். செல்வராஜ் வரவேற்றாா், எம். லோகநாதன் பி. ராஜேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT