திருச்சி

மாபெரும் தடுப்பூசி முகாம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சிக்கு 4-ம் இடம் 

DIN

மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் 4ஆவது இடத்தைப் பிடித்தது.

தமிழகத்தில் கடந்த நான்கு வாரங்களாக ஞாயிற்று கிழமைகளில் மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் ஐந்தாவது வாரமாக மாபெரும் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (10.10.2021) நடைபெற்றது.

இதில் திருச்சி மாநகரில் 192 இடங்களிலும், 2 நடமாடும் குழுக்கள் மூலமாக ஊரகப் பகுதிகளில் 418 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திச் சென்றனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் திருச்சி மாவட்டத்தில் 46 ஆயிரத்து 228 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும், 44 ஆயிரத்து 466 பேர் இரண்டாவது தவணைத் தடுப்பூசியும் என மொத்தம் 90 ஆயிரத்து 654 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

தமிழக அளவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையில் திருச்சி மாவட்டம் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT