முகப்பு
உலகம்

துபை விமான நிலையம் அருகே ஈரானிய ட்ரோன் தாக்குதல்: 4 பேர் காயம்!

துபை அருகே ட்ரோன் தாக்குதலில் 4 பேர் காயம் ஏற்பட்டது பற்றி..

Updated On : 11 மார்ச், 2026 at 8:31 AM
துபை
பகிர்:

துபை சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 4 பேர் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், துபை சர்வதேச விமான நிலையத்தின் மிக அருகே ஈரான் இன்று (மார்ச் 11) ட்ரோன் தக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரானிய ட்ரோன்கள் மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர். இருப்பினும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

துபை ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று காலை ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இரண்டு கானா நாட்டவரும், ஒரு வங்கதேச நாட்டவருக்கும் காயம் அடைந்தனர். இந்திய நாட்டவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இருப்பினும் விமானங்கள் நிறுத்தப்படவில்லை, தொடர்ந்து இயக்கப்படுகிறது.

நீண்ட தூர விமான நிறுவனமான எமிரேட்ஸின் தாயகமான துபை சர்வதேச விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கு உலகின் மிகவும் பரபரப்பானது. விமான நிலையம் போரில் குறிவைக்கப்பட்டிருந்தாலும், அதிகாரிகள் விமானங்களை இயக்கி வருவதாகவும், அதற்கான அட்டவணை தயாரித்து வருவதாக ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

summary

Two Iranian drones hit near Dubai International Airport on Wednesday, wounding four people, though flights continue, authorities said.

முழு கட்டுரையைப் படிக்க →