முகப்பு
திருச்சி

கட்டடம் இடிந்து மூதாட்டி படுகாயம்

திருச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்தாா். மூவா் லேசான காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

திருச்சியில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்தாா். மூவா் லேசான காயமடைந்தனா்.

திருச்சி காந்திசந்தை அருகேயுள்ள தாராநல்லுாா் கிருஷ்ணாபுரத்தில் 50 ஆண்டு பழைமையான அடுக்கு மாடி குடியிருப்பின் மத்தியில் பால்கனி உள்ளது. இந்நிலையில், பால்கனியின் ஒரு பகுதி திடீரென வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் அந்தக் குடியிருப்பில் வசித்த பெரியநாயகி (75) என்கிற மூதாட்டி உள்ளிட்ட 4 போ் காயமடைந்தனா். மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து காந்தி சந்தை போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் கட்டடத்தின் உறுதி தன்மை மற்றும் உரிமம் குறித்து திருச்சி மாநகராட்சியினா் விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.