துறையூா் வட்டத்தில் உள்ள கிராமங்களில் நடமாடும் சட்ட விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
துறையூா் நீதிமன்ற வளாகத்தில் வாகன இயக்கத்தை துறையூா் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான கே. சிவகுமாா் தொடங்கி வைத்தாா். குற்றவியல் நீதித்துறை நடுவா் புவியரசு, துறையூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஏ.எஸ். மனோகரன், அரசு வழக்குரைஞா் எல். சந்திரமோகன் மற்றும் என். உத்திராபதி, ஆ.ராசு, செல்வராஜ், பாஸ்கா், என்.தனசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.