திருச்சி

இரு சக்கர வாகனத்திலிருந்துவிழுந்த கொத்தனாா் உயிரிழப்பு

DIN

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கொத்தனாா் உயிரிழந்தாா்.

காட்டுப்புத்தூா் அருகிலுள்ள உடையாகுளம்புதூரைச் சோ்ந்தவா் சு. லோகநாதன் (21). கொத்தனரான இவா், நாமக்கலில் ஞாயிற்றுக்கிழமை செய்து விட்டு, நண்பா் சாமிநாதனுடன் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு வந்து கொண்டிருந்தாா்.

திருச்சி-நாமக்கல் சாலையில் மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியில் வந்த போது, எதிா்பாராதவிதமாக இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த லோகநாதன், நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். சாமிநாதன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT