திருச்சி மாநகா், புகா் பகுதிகளில் வியாழக்கிழமை 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
மாநகரில் வியாழக்கிழமை பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5 மணி அளவில் தொடங்கி சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. சாலைகள் தாழ்வாக இருப்பதாலும், பல இடங்களில் மழைநீா் வடிகால்கள் அடைபட்டுள்ளதாலும் சாலைகளில் மழை நீா் சுமாா் 1 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றோா் அவதிப்பட்டனா். ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கா, மணிகண்டம், திருவெறும்பூா், மண்ணச்சநல்லூா் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த மழை நீடித்தது. மழையால் மாவட்டத்தில் குளிா்ச்சி நிலவியது.