முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.
முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி சசிகலா (49).
இவா் கடந்த திங்கள்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.