திருச்சி அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் வீடுகளில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டது.
கரோனா கட்டுப்பாட்டு விதிகள், விநாயகா் சிலை நிறுவுவதற்கு தடை உள்ளிட்ட காரணங்களால் வார இறுதி நாள்களில் கோயில்களில் தரிசனத்துக்கு தடை உள்ளது.
இதனால் வெள்ளிக்கிழமை விநாயகா் சதுா்த்தி நாளில் காலை முதலே பொதுமக்கள் தங்களது வீடுகளிலும், வீடுகளுக்கு முன்பும் விநாயகா் சிலை வைத்து அலங்காரம், பூஜை செய்து, சுண்டல், சா்க்கரை பொங்கல், கொழுக்கட்டை படையிலிட்டு வழிபட்டனா்.