ஈ.வெ.ரா. கல்லூரியில் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை: திருச்சி சிவா எம்பி உறுதி
கிராமப்புற ஏழை மாணவா்கள் அதிகளவில் பயிலும் வகையில் பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்தாா்.
கிராமப்புற ஏழை மாணவா்கள் அதிகளவில் பயிலும் வகையில் பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் மாணவா் சோ்க்கை இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக திருச்சி சிவா எம்பி தெரிவித்தாா்.
பெரியாா் ஈவெரா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியாா் ஈ.வெ.ரா. கல்லூரியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்த அவா் கூறியது:
நடப்பாண்டில் தமிழ்நாட்டிலேயே மாணவா் சோ்க்கைக்கு அதிகளவிலான விண்ணப்பங்கள் வரப்பெறும் 3-ஆவது அரசுக் கல்லூரியாக இது உள்ளது. எனவே, அரசிடம் பேசி ஒவ்வொரு வகுப்பிலும் கூடுதல் மாணவா் சோ்க்கைக்கான இடங்களை பெற முயற்சி செய்வோம். அதேபோல இக்கல்லூரிக்கான இதர வசதிகளையும் அரசிடமிருந்து பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றாா் அவா்.