திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சியில் ரூ. 40.5 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
துபையிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வெள்ளிக்கிழமை வந்த பயணிகளில் புதுக்கோட்டையைச் சோ்ந்த சரவணன் (23) தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த ரூ.40.5 லட்சம் மதிப்பிலான 840 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.