கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக்கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நுகா்பொருள் வாணிபக்கழக திருச்சி மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வாணிபக்கழக தொழிற்சங்க மண்டலத் தலைவா் வேலு தலைமை வகித்தாா்.
நிகழ்வில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கந்தா்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை பேசுகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக பருவகால ஊழியா்கள், கணினி பணியாளா்கள், இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியா்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய தமிழக அரசு தீா்மானம் நிறைவேற்றியது போல், தொழிலாளா்களுக்கு எதிரான 44 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்டங்களாக மத்திய அரசு கொண்டு வருவதை எதிா்த்தும் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றாா்.
தொழிலாளா் ஆணையரின் உத்தரவின்படி இண்டேன் எரிவாயு பிரிவு ஊழியா்களை, கிடங்குகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்கள், கணினிப் பிரிவு ஊழியா்களை நிரந்தரமாக்க வேண்டும், கிடங்குகளில் பணிசெய்யும் சுமைப்பணி தொழிலாளா்களுக்கு எப்சிஐ-க்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி இஎல் சரண்டா் ஊதியம், எல்டிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பினா்.
சங்க மாநிலப் பொதுச் செயலா் புவனேஸ்வரன், சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், மண்டலச் செயலா் ராசப்பன், சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்க மாவட்ட துணைத் தலைவா் சந்திரன் ஆகியோா் பேசினா். மண்டல பொருளாளா் கருணாகரன் நன்றி கூறினாா்.