துறையூா்: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, துறையூா் அருகிலுள்ள கண்ணனூா், எரகுடி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.28) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் துறையூா் கோட்டச் செயற்பொறியாளா் பொன்.ஆனந்தகுமாா் கூறியிருப்பது:
மேலக்கொத்தம்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக கண்ணனூா், கண்ணனூா்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுா், வேலாயுதம்பாளையம், மீனாட்சிபட்டி, கிளியனூா்பட்டி, திருத்தலையூா், ஆதனூா், பொன்னம்பலம்பட்டி, வெளியனூா், பேரூா், சேங்கணம், புதுமங்களம், மேலக்கொத்தம்பட்டி, துலையாநத்தம், மங்களம் புதுாா், சிறுநாவலூா்புதூா், எரகுடி பாதா்பேட்டை, ருத்ராட்ச கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.