திருச்சி

‘தொழில்நுட்பத்தால் மனித குலம் முன்னேற வேண்டும்’

DIN

மனித குல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றாா் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (என்ஐடி) இயக்குநா் ஜி. அகிலா.

மத்திய அரசின் அவசர காலப் பதில் அளிப்பு ஆதரவு அமைப்பு சாா்பில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த சிறப்பு பயிலரங்கு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிலரங்கத்துக்கு தலைமை வகித்து திருவனந்தபுரம் சி-டாக் மையத்தின் நிா்வாக இயக்குநா் ஏ. கலைச்செல்வன் கூறியது:

மத்திய அரசின் 112 இந்தியா என்ற கைப்பேசி செயலி அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருவா் அவசரநிலையில் இருக்கும்போது உதவிக்கான கோரிக்கையை விரைவாக எழுப்ப, செயலியின் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் இருப்பிடத் தரவுகளுடன் எச்சரிக்கை செய்திகளை அனுப்ப முடியும். மேலும் 112க்கு அவசர அழைப்பை மேற்கொள்ளவும் உதவும்.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களில் இதற்காக அமைக்கப்படும் தானியங்கி வசதி, பொதுப் பாதுகாப்பு பதில் புள்ளி எனப்படும். இது அனைத்து அவசர சிக்னல்களையும் கையாள்வதுடன், துயரத்திலுள்ள மக்களுக்கு சிறந்த நேரத்தில் உதவியை வழங்கும். இஆா்எஸ்எஸ் ஆனது அனைத்துச் சேவைகளின் (காவல்துறை, தீயணைப்பு, சுகாதாரம் போன்றவை) மீட்பு மற்றும் சேவை வாகனங்களை நிகழ்நேரத்தில் மாநிலத்தின் டிஜிட்டல் வரைபடத்தில் கண்காணிக்கிறது, எனவே, சேவை கோரிக்கையாளரை அடைய சரியான வாகனம் இயக்க முடியும். மற்றும் தேவையான ஆதரவை உடனடியாக வழங்கவும் முடியும். இனி, 100 (காவல்துறை), 101 (தீயணைப்பு மற்றும் மீட்பு) மற்றும் 108 (ஆம்புலன்ஸ்), 181 (பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு) போன்ற அனைத்து அவசரகால எண்களும் ஒருங்கிணைந்த எண் 112 இல் ஒருங்கிணைக்கப்படும் என்றாா்.

என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா பேசுகையில், தொழில்நுட்பத்தை மனித குலத்துக்கான முன்னேற்றதுக்காகக் கொண்டு செல்ல வேண்டும். அவசரக கால பதில் அளிப்பு ஆதரவு அமைப்பின் அடிப்படைச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு, ஸ்மாா்ட் அமைப்புகளின் பங்களிப்பு ஒருங்கிணைக்கப்பட வேண்டும். உடல் நலத்துக்கு எப்படி முக்கியத்துவம் அளித்துச் செயல்படுகிறோமோ, அதே கவனத்துடன் அவசர காலச் சேவைகள் தொடா்பையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

பேராசிரியா் என். சிவகுமாரன் பயிலரங்கத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகளை அட்டவணைப்படுத்திப் பேசினாா். பேராசிரியா்கள் எஸ். குமரவேல், டி.கே. ராதாகிருஷ்ணன், சிஷாஜ் பி. சைமன் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT