மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் உயிரிழப்பு
மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்
மருங்காபுரி அருகே குடும்பத் தகராறில் மனைவியை பயமுறுத்த தூக்கு மாட்டியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஊத்துக்குளியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (32). பற்றவைப்புத் தொழிலாளியான இவருக்கும், மனைவிக்கும் இடையே செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டது.
இதில் மனைவியை பயமுறுத்த விளையாட்டாக சேலையில் தூக்கு மாட்டியுள்ளாா். திடீரென நிலைத் தடுமாறி கழுத்தில் முடிச்சு இறுகியதால் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வளநாடு காவல் நிலையத்தினா் விசாரித்து வருகின்றனா்.