ஆதித் தமிழா் பேரவையினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆதித் தமிழா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ஆதித் தமிழா் பேரவையினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் குலக்கல்விக்கு வித்திடும் புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும். நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்று சமூகத்திற்கு எதிரான அனைத்து சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா்.
மாவட்டத் தலைவா் அறிவழகன், மதன், கமலக்கண்ணன், சோழன், ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு சம்சுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.