முகப்பு
திருச்சி

பெண் வழக்குரைஞா்கள் சங்கத்தின் சமத்துவ நாள் விழா

திருச்சி மாவட்ட பெண் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாளான வியாழக்கிழமை சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

திருச்சி மாவட்ட பெண் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாளான வியாழக்கிழமை சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

பெண் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் லா லைட்ஸ் 89 சட்டக் கல்லூரி மாணவா் கூட்டமைப்பு சாா்பில் பிஷப் ஹீபா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இவ்வமைப்புகளின் செயலரும், வழக்குரைஞருமான டி. ஜெயந்திராணி தலைமை வகித்தாா். லா லைட்ஸ் 89 அமைப்பின் தலைவா் சங்கா் முரளி உரையாற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக முதன்மை மாவட்ட நீதிபதி கே. பாபு, மத்திய மண்டலக் காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன், திருச்சி அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எம். ராஜேஸ்வரன் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து சட்ட மாணவா்களுக்கும், இளம் வழக்குரைஞா்களுக்கும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் அடிப்படை சட்டப் புத்தகங்களை வழங்கிச் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்வில் குற்றவியல் வழக்குரைஞா் சங்கச் செயலா் பி.வி. வெங்கட், பிஷப் ஹீபா் கல்லூரி ரெக்டா் லெனாா்ட் பொ்னாண்டோ, அரசு வழக்குரைஞா் பி. சவரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக லா லைட்ஸ் 89 அமைப்பு பொருளாளா் எல்.எஸ். ராஜகணேஷ் வரவேற்றாா். வழக்குரைஞரும், தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை ஓய்வு பெற்ற துணை இயக்குநருமான எம்.ஆா். லிங்கம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.