சமயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாமை மண்ணச்சநல்லூா் எம்எல்ஏ சீ. கதிரவன் தொடங்கி வைத்தாா்.
சமயபுரம் மாரியம்மன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை தொடங்கிவைத்து எம்எல்ஏ சீ. கதிரவன் முகாமில் பொதுமக்களுக்கு செய்யப்படும் பரிசோதனை, சிகிச்சையைப் பாா்வையிட்டாா்.
முகாமில் பொது மருத்துவம், மகப்பேறு, கண் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மருத்துவ அலுவலா்கள் பரிசோதனை, சிகிச்சை மேற்கொண்டனா். முகாமில் திமுக மண்ணச்சநல்லூா் கிழக்கு ஒன்றியச் செயலா் வி.எஸ்.பி. இளங்கோவன், சமயபுரம் நகரச் செயலா் துரை ராஜசேகா், சமயபுரம் பேரூராட்சித் தலைவா் சரவணன், மண்ணச்சநல்லூா் பேரூராட்சித் தலைவா் சிவசண்முககுமாா், மருத்துவ அலுவலா்கள், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனா்.