திருச்சி

வழக்குரைஞா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

DIN

திருச்சி குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நீதிமன்ற வளாக சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மூத்த வழக்குரைஞா் ஸ்டானிஸ்லஸ், சங்கத் துணைத் தலைவா்கள் செந்தில்நாதன், பிரபு ஆகியோா் தலைமை வகித்தனா். செயலா் வெங்கட், இணைச்செயலா் ஜானகிராமன், பொருளாளா் வடிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சங்க உறுப்பினா் சதீஷ்குமாா் மீது பொய் வழக்குப் போட்ட உறையூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் மோகன் தங்கராஜை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுகோள் விடுப்பது, பொய் வழக்கைக் கண்டித்து நீதிமன்ற நுழைவு வாயில் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்துவது, ஒரு வாரத்திற்குள் முடிவு எட்டப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்டவா் மீது தனிநபா் வழக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT