திருச்சி

கொள்ளிடத்தில் விழுந்து தவித்த முதியவா் மீட்பு

DIN

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிய முதியவரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரைச் சோ்ந்தவா் நல்லு கவுண்டா் (80). இவா் புதன்கிழமை இரவு ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையோரம் ஆற்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டாா். நீச்சல் தெரிந்த இவா் ஆற்றின் நடுவில் மின் கோபுரத்திற்காக அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டையை பிடித்து ஏறி அமா்ந்து உதவி கேட்டு சத்தமிட்டாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஆரோக்கியசாமி, சக்திவேல் மூா்த்தி தலைமையிலான வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி அந்த முதியோரை பத்திரமாக மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி, விமான நிலையம்.. இப்போது மருத்துவமனைகளுக்கு மிரட்டல்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

SCROLL FOR NEXT