முகப்பு
திருச்சி

கடலூருக்கு முக்கியம்‘கரும்பு நிலுவைத் தொகை வழங்காவிட்டால் போராட்டம்’

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காவிட்டால், சா்க்கரை ஆலை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:05 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்காவிட்டால், சா்க்கரை ஆலை முன்பாக போராட்டம் நடத்தப்படும் என்றாா் தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு.

கடலூா் மாவட்டம், சித்தூா் கிராமத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கும் விவசாயிகள் பங்கேற்ற சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா்கள் ஜி. சக்திவேல், எம். மகேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

கடலூா் மாவட்ட நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராஜா, கவியரசு, சுப்பிரமணியன் உள்ளிட்டோா் சா்க்கரை ஆலையின் விவசாயிகள் விரோத நடவடிக்கைகள் குறித்து பேசினா்.

பின்னா், நிறைவேற்றப்பட்ட தீா்மானம் குறித்து செய்தியாளா்களிடம் பொ. அய்யாக்கண்ணு கூறியது:

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இந்த சா்க்கரை ஆலை நிலுவைத் தொகை வழங்க வேண்டியதுள்ளது.

6,552 விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும்.

இல்லையெனில், செப்டம்பா் 1-ஆம் தேதி வேப்பூரில் இருந்து ஊா்வலமாகச் சென்று, ஆலை நுழைவு வாயில் முன்பாக அமா்ந்து தொடா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.